ரஸ்யா செயின் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம்(காணொளி)

259 0

ரஸ்யா செயின் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ரஸ்யா செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ரஷ்ய சுகாதர துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த குண்டு வெடிப்புக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் முயன்று வருவதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.

ரஸ்யாவில் இரண்டு மத்திய மெட்ரோ நிலையங்களுக்கு இடையில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.