யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறப்பு(காணொளி)

251 0

யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு  மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.

வகுப்பறைகளை வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் வெல்வின் இரோனியஸ் மற்றும் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி ச.சிவானந்தராஜா திறந்து வைத்தார்.

பாடசாலையின் அதிபர் ச.துரைசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.