வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்..(காணொளி)

258 0

வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா, தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வாரிக்குட்டியூர் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்து, செட்டிகுளம் பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றுதிரண்டு வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணிக்கு வாரிக்குட்டியூர் சந்தியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றுகூடி

வீதியை திருத்தம் செய்து தா,

மாணவர்களின் போக்குவரத்துக்கு பாதுகாப்பான வீதி வேண்டும்,

எங்கள் ஊரில் கிரவல் எடுத்து ஏ-9 வீதியை திருத்துவதா?

போன்ற கோசங்களை எழுப்பியதுடன்,

பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊர்வலமாக தமது பாடசாலையான கணேஸ்வரா வித்தியாலயத்திற்கு சென்றனர்.

அங்கிருந்து வாரிக்குட்டியூர், தாலிக்குளம் மற்றும் பாவற்குளம் மக்கள் தாலிக்குளத்தில் இருந்து மன்னார் வீதி வரை வீதியை திருத்தம் செய்து தா என்ற கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.