பிறந்து ஒருநாள் மட்டுமே நிறைவடைந்த சிசுவை கொலை செய்த தாய் கைது

241 0

பிறந்து ஒருநாள் மட்டுமே நிறைவடைந்த சிசுவை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தாய் ஒருவரை மட்டக்களப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், தமது குழந்தையை கிணற்றில் வீசியெறிந்து கொலை செய்ததாக காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து குறித்த குழந்தையின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, குறித்த பெண்ணை இடமொன்றிற்கு வரவழைத்து பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

சந்கேநபர் நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.