மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா(காணொளி)

256 0

மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வுகள் இன்று வித்தியாலய அதிபர் கே.பாஸ்கரன்  தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், புதூர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.சபாரெத்தின குருக்கள் தலைமையில் விசேட தீபாராதனை பூஜை வழிபாட்டுகள் இடம்பெற்று, பாடசாலையின் பெயரப்;பலகை மற்றும் சரஸ்வதி சிலை என்பன திறந்து வைக்கப்பட்டன.

நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக, மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக, வர்த்தகர் ராஜ்குமார், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை வளாகத்திலுள்ள சரஸ்வதி சிலையானது, சமூக சேவையாளரும், வர்த்தகருமான எஸ்.ராஜ்குமாரின் நிதி உதவியுடனும், பாடசாலை நலன் விரும்பிகளின் பங்களிப்புடனும் ஸ்தாபிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/D43rlsP8-KY