மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்

94 0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (03) இரவு மிருகவேட்டையில் ஈடுபட்ட ஒருவரின் உள்ளூர் தயாரிப்பு துப்பாகி வெடித்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டுபகுதியில் சம்பவதினமான இரவு 100 மணிக்கு வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் மிருகவேட்டைக்கு சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் சென்ற நிலையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில்   பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.