3 ஏக்கர் நிலம் கொடுத்து 14 வயது சிறுமியை மணந்த 46 வயது விவசாயி

348 0

rape_story_647x404_1018151104381கிருஷ்ணகிரி அருகே 3 ஏக்கர் நிலம் கொடுத்து 14 வயது சிறுமியை 46 வயது விவசாயி திருமணம் செய்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், சிறுமியை மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டம் கொடாங் கியூரைச் சேர்ந்தவர் விவசாயி மாதப்பன் வயது 46. இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவரது மகளின் தோழியான அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 3வதாக, கடந்த 9ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.
இதற்காக அந்த சிறுமியின் தந்தைக்கு 3 ஏக்கர் நிலத்தைத் தருவதாக ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்படி, மாதப்பன் திருமணம் செய்த 14 வயது சிறுமி மட்டும் மீட்கப்பட்டுள்ளார்.