தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தமிழகத்தில் இல்லை – மு.க.ஸ்டாலின்

327 0

stalin_2933342fஜவஹர் நகரில் கொளத்தூர் தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம் உள்ளது.
ஸ்டாலின் 2வது முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் எம்எல்ஏ அலுவலகம் அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார்.
அலுவலகத்தின் உள்ளே குத்துவிளக்கேற்றிய அவர், தொகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் 6 மாணவ, மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 6 பெண்களுக்கு தையல் இயந்திரம் என பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கினார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் 2வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு சட்டம் – ஒழுங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தினசரி கொலை, கொள்ளைகள், சங்கிலி பறிப்பு ஆகியவை நடைபெறுகின்றன.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை.
எனவே, குற்றங்களைத் தடுத்து சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.