திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

345 0

download-1திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், திரியாய்- 05ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த 65 வயதுடைய காளியப்பன் செல்லப்பிள்ளை என இனங்காணப்பட்டுள்ளார்.

திரியாய் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் காட்டு யானை வந்த போது அதனை விரட்டிச்சென்ற நிலையில், யானை தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.