அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்து வேட்டை(காணொளி)

371 0

அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்றது.

அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய்ய கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் வவுனியா கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள இலுப்பையடி சந்தியில் கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இப்போராட்டமானது காலை 8.30 தொடக்கம் 11.30 வரை நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் அரசியல்பிரமுகர்கள்,பொது அமைப்புக்கள்.பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.