வவுனியாவில் இரு பொலிஸ் நிலையங்கள் நாளை திறப்பு

341 0

imagesவவுனியாவில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் நாளையதினம் திறந்துவைக்கப்படவுள்ளன.

வவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் என்பன நாளை திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈச்சங்குளம் புதிய பொலிஸ் நிலையம் நாளை காலை 8.30 மணிக்கும், போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் முற்பகல் 11 மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த இரு பொலிஸ் நிலையங்களும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.