யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

327 0

downloadயாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்று, உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளை சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றதன் பின்னர், அவரது சடலம் நீர்நிலையொன்றிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.