தமிழ் நீதிபதிகளில் நம்பிக்கை இல்லை- பெங்கமுவ நாலக்க தேரர்

321 0

hqdefaultயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இராணுவ சிப்பாய்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமானது, மற்றுமொரு இனவாத செயற்பாடா என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோர் தொடர்ந்தும் இனவாத அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பெங்கமுவ நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

அதனால் தமிழ் நீதிபதிகள் மீது தமக்கு நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போன சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் சில இராணுவ சிப்பாய்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் போனதாக கூறப்படும் நபர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.