பிரசாந்தனுக்கு பிணை

334 0

160829104120_prasanthan_512x288__nocreditவிளக்க மறியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 10 இலட்சம் ரூபாய் இரண்டு சரீரப்பிணைகளிலும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் அனுமதி வழங்கினார்.

அத்துடன் வாராந்தம் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் காத்தான்குடி காவற்துறை நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.