புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்

350 0

download (14)ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்வம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகத்திற்குரியவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்குமாறு, இதன்போது புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு நீதவான் அனுமதி அளித்தார்.

குறித்த முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரி, லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகத்திற்குரியவராக பெயரிடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.