நல்லூரில் செருப்புடன் நடமாடிய இருவருக்கு 10 ஆயிரம் ரூபா பிணை

655 0

tkn-09-12-rs-01-konநல்லூர் ஆலய வீதியில் செருப்புடன் நடந்த இருவரை பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி தேவி இளங்கோவன் அனுமதித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா கடந்த 8ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதனை முன்னிட்டு ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்கு வருகை தருவோரிடம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை நேர திருவிழா முடிவடைந்த பின்னர் இரவு 8 மணியளவில் இரு இளைஞர்கள் ஆலய சூழலில் செருப்புடன் நடந்து சென்று உள்ளனர்.

அதனை அங்கு சிவில் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் கண்ணுற்று இரு இளைஞர்களையும் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடினார்கள் எனும் குற்ற சாட்டில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் இ யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைத்து இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர்.

அதன் போது இ குறித்த இருவரும் ஆலய வீதியில் செருப்புடன் சென்றதாகவும் இ அதனால் அவர்களிடம் ஆள் அடையாள அட்டையை காண்பிக்க கேட்ட போது அதனை அவர்கள் காண்பிக்கவில்லை என குற்றசாட்டை முன் வைத்தனர்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி உ.ரவிசங்கர் ஆலய நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட ஒழுங்கு விதியினை சட்டமாக்கி கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு உண்டா ? என மன்றில் கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 5ம் திகதிக்கு ஒத்திவைத்த பதில் நீதவான் குறித்த இரு இளைஞர்களையும் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல அனுமதித்தார்.