எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்துள்ளது: முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் குற்றச்சாட்டு

Posted by - December 13, 2017

எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்ததன் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் நடந்துள்ளதாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

Posted by - December 13, 2017

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே குறித்த பொலிஸ் அதிகாரியும் முச்சக்கரவண்டிச் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் அதிகாரி சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருட்டு வழக்கு ஒன்றின் சான்றுப் பொருளான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை விற்றிருந்ததாக தெரியவருகின்றது. அது தொடர்பில் ஒழுக்காற்று

சென்னையில் 18-ந் தேதி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - December 13, 2017

கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, சென்னையில் 18-ந் தேதி (திங்கட்கிழமை) பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி ஏற்றதால் பா.ஜனதா பயப்படுகிறது: திருமாவளவன்

Posted by - December 13, 2017

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்பதைப் பார்த்து பாரதிய ஜனதா பயப்படுகிறது என திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை

Posted by - December 13, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த மத்திய- மாநில அரசுகள் சதி: திருமாவளவன்

Posted by - December 13, 2017

ஆர்.கே. நகரில் தி.மு.க. வெற்றி உறுதி என்பதால் தேர்தலை நிறுத்த மத்திய- மாநில அரசுகள் சதி செய்வதாக திருமாவளவன் கூறினார்.

சுற்றுநிருபத்துக்கு அமைய தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்

Posted by - December 13, 2017

தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் 2017ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் தேர்தல் சுற்றுநிருபங்களில் கோரப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தம்மாலோக்க தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - December 13, 2017

யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய, உடுவே தம்மாலோக்க தேரருக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (12) அனுமதி வழங்கியது.

அமைச்சரின் கருத்துத் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு விசாரிக்க வேண்டும்

Posted by - December 13, 2017

அமைச்சர் ஜோன் அமரதுங்கவால் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்   ஜனக பண்டார தென்னக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கமும் பொலிஸும் எங்கள் கையில்! -ஜோன் அமரதுங்க

Posted by - December 13, 2017

ஜா-எல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றில், அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றிய விடயம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.