அரசாங்கமும் பொலிஸும் எங்கள் கையில்! -ஜோன் அமரதுங்க

308 0

ஜா-எல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றில், அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றிய விடயம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கைகளிலேயே, அரசாங்கமும் பொலிஸும் உள்ளன எனவும், மக்கள் தமக்கே வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

“அரசாங்கமும் பொலிஸும், இத்தடவை எங்களிடமுள்ளன. யாரும் அச்சமடையத் தேவையில்லை. யாரையும் நாங்கள் எதிர்கொள்வோம். எங்களுக்குத் தேவையானது எல்லாம், உங்கள் வாக்கு மாத்திரமே” என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு, அரிசி, மரக்கறிகள், தேங்காய் போன்றவற்றின் விலை அதிகரிப்புக்கு, நாட்டில் நிலவும் வரட்சியே காரணமெனத் தெரிவித்திருந்த அவர், இப்பொருட்களை யாரும் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை, அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a comment