மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு

Posted by - December 21, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார், இன்று வியாழக்கிழமை  பிற்பகல் 2.20 மணியளவில் தெரிவித்தார். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். இந்த 8 சபைகளுக்குமென 84 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் 81

கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை

Posted by - December 21, 2017

மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அளித்த தீர்ப்பில் சிபிஐ மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுகளை

க்ரீன் ரீ என்ற பேரில் போதைப்பொருள் ; மக்களே அவதானம் !

Posted by - December 21, 2017

மிகவும் சூட்சுமமான முறையில் க்ரீன் ரீ எனப் பெயரிடப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் பைக்கற்றுகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டதாக தெரிவித்து க்ரீன் ரீ என பெயரிடப்பட்டு, பொதி செய்யப்பட்ட நிலையில் போதை பொருட்கள் மீடக்கப்பட்டுள்ளன. கொழும்பு பாலத்துறை நாலங்கம் பகுதியில் நேற்று அதிகாலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, 542 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள்

இன்றுடன் நிறைவடைகின்றது க.பொ.த. சாதாரண தர பரீட்சை

Posted by - December 21, 2017

2017 ஆம் கல்வி ஆண்டுக்காக இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் யாவும் இன்றுடன் நிறைவுபெறுகின்றன இந்நிலையில், பரீட்சை முடிவடைந்ததும் பரீட்சார்த்திகள் அமைதியான முறையில் வீடு திரும்ப வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் நாரஹேன்பிட்டியில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பரீட்சார்த்திகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பரீட்சைக்குப் பின்னர் எவரேனும் தன்னிச்சையாக செயற்பட்டு சட்ட திட்டங்களை மீறும் பட்சத்தில் அவருக்கு

80 கிலோ பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

Posted by - December 21, 2017

நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா – கொலபத்தன பகுதியில் காட்டு பன்றி இறைச்சி 80கிலோவுடன் சந்தேக நபர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. தலவாக்கலை விசேட அதிரடிபடையினரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே கொலபத்தன தோட்டபகுதியில் பெருமளவிலான பன்றி இறைச்சியை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார். இதேவேளை கைது செய்யபட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட  80 கிலோ பன்றி இறைச்சியையும் நாவலபிட்டி பொலிஸ்

40 சாராய போத்தல்களுடன் இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது!!!

Posted by - December 21, 2017

இத்தாலி நாட்டிலிருந்து 40 சாராய போத்தல்களை சட்டவிரோதமாக நாட்டினுள் கொண்டு வந்த இரு பெண்களை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் ஜா-எல மற்றும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இத்தாலி நாட்டில் தொழில் புரிபவர்களாவர். சுங்க மற்றும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு தடவையில் நாட்டினுள் கொண்டு வரும் மதுபானத்தின் அளவானது 2.5 லீட்டராகும். இச் சட்ட விதிகள் தெரியாத

காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - December 21, 2017

காலி முகத்திடல் வீதி லோட்டஸ்ட் சுற்று வட்ட நுழைவாயிலில் இருந்து மூடப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டமே இதற்குக் காரணம் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்மலானை விமான நிலையத்தை விருத்தி செய்ய திட்டம்

Posted by - December 21, 2017

இரத்மலானை விமானநிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற 25 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியை சிவில் விமான சேவைகள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமின் பகுதியொன்றை இலங்கை விமானப்படையினரின் இணக்கத்துடன் விமான நிலையத்தின் வடபகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

பெல்ஜியத்துடன் இலங்கை புறிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - December 21, 2017

இருதரப்பு ஆலோசனை இயந்திரமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அரசு தீர்மானித்துள்ளது. இருதரப்பு ஆலோசனை இயந்திரமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பெல்ஜியத்தின் அரச சேவை வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வியாபாரம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - December 21, 2017

கனிய எண்ணெய் கையிருப்புகளை பராமரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டீ.ஜே.ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் கப்பலொன்று வந்தால், 14 நாட்கள் அளவிலேயே எரிபொருளை வைத்துக்கொள்ள முடியும். 14 நாட்களுக்குள் கப்பலொன்று வராவிட்டால், வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். மூன்று மாதங்களுக்கு எவ்வாறு எரிபொருளை வைத்திருக்க முடியும்? அப்படியாயின் இன்றும் 90 கொள்கலன்கள்