இன்றுடன் நிறைவடைகின்றது க.பொ.த. சாதாரண தர பரீட்சை

10908 0

2017 ஆம் கல்வி ஆண்டுக்காக இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் யாவும் இன்றுடன் நிறைவுபெறுகின்றன

இந்நிலையில், பரீட்சை முடிவடைந்ததும் பரீட்சார்த்திகள் அமைதியான முறையில் வீடு திரும்ப வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மற்றும் நாரஹேன்பிட்டியில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பரீட்சார்த்திகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பரீட்சைக்குப் பின்னர் எவரேனும் தன்னிச்சையாக செயற்பட்டு சட்ட திட்டங்களை மீறும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீரற்ற காலநிலையால் நெடுந்தீவிற்கு வினாத்தாள்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தீர்ப்பதற்கு கடற்படையினரும், விமானப் படையினரும் உதவியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment