வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட நடைமுற பிற்போடப்பட்டுள்ளது

Posted by - November 1, 2017

வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிடுவதை நடைமுறைப்படுப்படுத்துவது பிற்போடப்படுபவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த தண்டப் பணம் அறவிடல் இன்று முதல் நடைமுறை கொண்டுவரப்படவிருந்தது. எனினும், அது தொடர்பான ஆவணங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி தற்போதுவரை கிடைக்கவில்லை. எனவே, தண்டப்பணம் அறவிடுவதை நடைமுறைக்கு கொண்டுவருவது தாமதமாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைத் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை

Posted by - November 1, 2017

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வாரன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு நேற்றைய விவாதத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என சபாநாயகர் சபைக்கு அறிவித்ததன் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விவாதத்தின் மூன்றாவது தினமான இன்று, கட்சித் தலைவர்கள் அறிக்கை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இன்றைய தினம் இரவு 8 மணிவரை விவாதம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு

Posted by - November 1, 2017

மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த மாகாணங்களில் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பிதேசம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும்

போதைப்பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர்கள் கைது

Posted by - November 1, 2017

ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த – சமாதான மாவத்தை பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து, 485 கிராம்ஹெரோயின், 2 கிலோ 650 கிரதம் கேரள கஞ்சா மற்றும் 14 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரச மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

Posted by - November 1, 2017

அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருந்தாளர்கள் இன்று மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பதவி உயர்வு, மேலதிக நேரக்கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்தாளர்கள் காலை 8மணி முதல் மாலை 8மணிவரை நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலை மருந்தாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் தூர பகுதிகளில் இருந்து வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

விபத்தில் இளைஞன் மரணம்

Posted by - November 1, 2017

திருகோணமலை  சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இலங்கைத்துறை (லங்கா பட்டினம்) முகத்துவாரம் பிரதான வீதியில் உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் நேற்று மாலை (31) உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் சேனையூர்,மாவடிச்சேனை பகுதியைச்சேர்ந்த துறைநாயகம் தசீதன்  (17வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிச்சேனையிலிருந்து லங்காபட்டினம் வீதியின் ஊடாக தனது அக்காவை ஏற்றிக்கொண்டு பிறந்தநாள் வீடொன்றுக்கு சென்ற வேளை உழவு இயந்திரத்தில் மோதியதினால் அக்கா மற்றும் தம்பி படுகாயமடைந்த நிலையில்

2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம்

Posted by - November 1, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலாய 2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம் நேற்று பாடசாலையில்  சிறப்புற இடம்பெற்றது இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் து . ரவிகரன் பாடசாலை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் து . ரவிகரன் அவர்கள் பாடசாலையின் பின்புறம் உள்ள மதில் கட்டுவதற்காக மாகாண சபை நிதியிலிருந்து ரூபாய் 100,000/= நிதியினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர மாணவியின் சடலம் மீட்பு

Posted by - November 1, 2017

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் மாணவியொருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை சுடரொளி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயிலும், இராசன் விதுஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடைசியாக இவர் கடந்த திங்கட்கிழமை 30.10.2017 பாடசாலைக்கும் அதன்பின்னர் அன்றைய தினம் மாலையில் பிரத்தியேக வகுப்புக்கும் சென்று வந்துள்ளார் என்பது  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பெற்றோர்

மோட்டார் சைக்கிள் திருட்டு சந்தேக நபரான 18 வயது இளைஞன் கைது

Posted by - November 1, 2017

மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரான 18 வயது இளைஞன் திருட்டு இடம்பெற்று 4 மாதங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை 31.10.2017 கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28.06.2017 அன்று கருக்கல் நேரத் தொழுகைக்காக ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகரத்தில் உள்ள ஜாமிஉல் அக்பர் பள்ளிவாசலில் தொழுகையை முடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டுச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் 10 நிமிட இடைவெளியில் திருடப்பட்டிருந்தது. தனது பல்ஸர் ரக

வவுனியா பகவான் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தினால் கள்ளப்பாடு வடக்கில் உதவி வழங்கல்

Posted by - November 1, 2017

முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதியில் வவுனியா சத்திய சாயி சேவா நிலையத்தினரால் முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு ஒன்று கடந்த 2017.10.29அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டார். கள்ளப்பாடு வடக்கு ஆதி வைரவர் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வானது விருந்தினர்களது மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமானது. மேலும் வவுனியா பகவான் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தினரால் இறையன்பு பாசுரங்களும் பாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து