ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - November 1, 2017

இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தது. ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தூதுக்குழுவின் தலைவர் சர்வதேச கூட்டுறவு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் உதவி அமைச்சர் Kazuya Nashida ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜப்பான்

கீதா தொடர்பில் நாளை தீர்மானம்

Posted by - November 1, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன் முறையீட்டு மனு தொடர்பிலான தீர்வு நாளைய தினம் அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போடடியிட்டு வெற்றிப்பெற்றிருந்தார் கீதா குமாரசிங்க. இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்திலும் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவருக்கு இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்க முடியாது என தெரவித்து காலி மாவட்டத்தினை சேர்ந்த சிலரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு தாக்கல்

யாழில் ஒருவர் மரணம்

Posted by - November 1, 2017

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தின் பாலம் ஒன்றின் அருகாமையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்துக்கான காரணம் இதுரையில் அறிப்படாததுடன் உயிரிழந்துள்ள நபர் நேற்று இரவு, வீட்டில் இருந்து சென்றுள்ளதாக மனைவி காவற்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்

அமைச்சரவை சந்திப்பும் – எடுக்கப்பட்ட முடிவுகளும்

Posted by - November 1, 2017

இன்றைய அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்… கம்பஹா மாவட்டத்தினுள் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிணைந்த திண்ம கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் கொம்போஸ்ட் செயற்தளத்தினை நிர்மாணித்தல் அதிக ஜனநெரிசல் மிகுந்த மற்றும் துரித கைத்தொழில் மயமாக்கத்தின் விளைவினால் நகர திண்மக் கழிவுகள் குவிகின்ற கம்பஹா மாவட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அவ்வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் சேகரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை முறையாக பிரித்து ஊக்குகின்ற

ஐரோப்பிய குழு – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Posted by - November 1, 2017

ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு வடமாகாண ஆளுநரை சந்தித்தனர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இன்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்தனர். அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வடமாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநர்  தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் மற்றும் காணிகளை இழந்துள்ளவர்கள் தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

156 சுற்றாடல் அதிகாரிகள் புதிதாக நியமனம்

Posted by - November 1, 2017

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 156 சுற்றாடல் அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (01) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. நிகழ்வை ஆரம்பித்து வைக்குமுகமாக 25 பேருக்கு ஜனாதிபதியினால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி உள்ளிட்ட குழுவினர்

மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது!

Posted by - November 1, 2017

சிறுபான்மை மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளை ஏற்கிறோம்!

Posted by - November 1, 2017

சர்ச்சைக்குரிய சைட்டம் மருத்துவக் கல்லூரி பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.