156 சுற்றாடல் அதிகாரிகள் புதிதாக நியமனம்

567 0

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 156 சுற்றாடல் அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (01) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.

நிகழ்வை ஆரம்பித்து வைக்குமுகமாக 25 பேருக்கு ஜனாதிபதியினால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Leave a comment