காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர்.

Posted by - November 4, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மனித உரிமைகள் விவகாரம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், புலனாய்வு மற்றும் உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் தொடர்பில் அனுபவமிக்கவர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த நிலையில், இது தொடர்பான விண்ணப்பங்கள் அரசியலமைப்பு பேரவைக்கு தற்போது கிடைத்துவருவதாக

நாடு முழுவதும் அபாயம் ஏற்பட்டுள்ளது – மகிந்த

Posted by - November 4, 2017

நாடு முழுவதும் பாதாள உலக குழுக்கள் தலைத்தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தங்காலை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு, மூன்று வாரங்களில், குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட சம்பவங்களை அறியக்கூடியதாக இருந்தது. இவற்றால் குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் அச்சத்துடன் வாழ்க்கின்றனர். தீவிரவாத்தைவிட தற்போது பாதாள உலகக் குழுக்கள் தலைத்தூக்கியுள்ளன. இதனால், நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் ஆபத்தானது என மஹிந்த ராஜபக்ஸ

தேர்தலில் ஐ.தே.க, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும்

Posted by - November 4, 2017

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். சிரிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில், இரண்டு பிரதான கட்சிகளும் புதிய சின்னம் ஒன்றில் போட்டியிடுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்தார்.

ராஜபக்ஸ போன்றோரின் குறிக்கோள் தொடர்பில் வடக்கு முதல்வர்

Posted by - November 4, 2017

அடுத்த தேர்தலின் வெற்றி பெறுவதே ராஜபக்ஸ போன்றோர்களின் ஒரேயொரு குறிக்கோள் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவருடன் முரண்பட்டு நாடாளுமன்றத்தில் பேசி, இந்த அரசாங்கம் அரையும் குறையுமான ஏதோ ஒரு வகையான ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினை பெறுவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை. தமிழ் மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வொன்றே தீர்வாக அமையும். இவ்வாறான தீர்வு சமஸ்டி அரசியல் யாப்பு ஒன்றின் கீழேயே

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்திக்க தீர்மானம்

Posted by - November 4, 2017

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்திக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளும், மக்கள் பிரதி நிதிகளும் தீர்மானித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தொடர் போராட்டம் நடத்திவரும் யாழப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வடமாகாண மக்கள் பிரதி நிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்த மற்றும் மாகாணசபை உறுப்பின்னர்களான கே.சிவாஜிலிங்கம், கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோர்

கிழக்கில் இனவிரிசலை ஏற்படுத்த தீயசக்திகள் முயற்சி – சிறிநேசன்

Posted by - November 4, 2017

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை ஏற்படுத்தும் வகையில் தீயசக்திகள் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். இனவாதத்தை தமிழ் – முஸ்லிம் மக்களிடையே தோற்றுவித்து அதன் மூலம் இனவாத அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதினெட்டாவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு இனவாதம், மதவாதம், குலவாதம்

மஹிந்தவிற்கு தமிழ் மக்கள் உதவக்கூடாது – சுமந்திரன்

Posted by - November 4, 2017

சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சிக்கு தமிழர்கள் உதவியாக இருந்துவிட கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை, புதிய அரசிலமைப்பு முயற்சி தோல்வியடைவதற்கு தமிழர்களே காரணம் என்று குற்றம் சுமத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்.- புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 3, 2017

புகழேந்தி தங்கராஜ் சென்னை அலைபேசி: 9841906290 அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம். உங்களைப் போலவே நானும் ஈழ விடுதலையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவன். நான் இயக்கிய திரைப்படங்களிலும், நான் எழுதுகிற பத்திரிகைகளிலும் ஈழமண்ணின் ஈரத்தையும் வீரத்தையும் தொடர்ந்து பதிவு செய்து வருபவன். நான் தமிழ்நாட்டில் பிறந்தவன். அதனாலேயே, ஈழ விடுதலைக்கு உலைவைக்கிற இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிப்பது எனது தலையாய கடமை என்று நினைக்கிறேன். எந்த நிலையிலும் உண்மையைப் பேசுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். 1987ல்

யாழ்ப்பாண ஆலயமொன்றில் மீன் மழை பெய்துள்ளது

Posted by - November 3, 2017

யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்களும் வந்து வீழ்ந்ததாக  செய்தியாளர் தெரிவித்தார். இன்று மாலை தொடக்கம் அங்கு ´மீன் மழை´ பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் பெருமளவானோர் கூடி இந்த விடயத்தை வியப்புடன் அவதானித்து வருகின்றனர்.

பல்கலை. மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு

Posted by - November 3, 2017

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் 4 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தற்போது சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரே மாணவர்களுடன் பேச்சு நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்ட கூடாரத்துக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. அரசியல் கைதிகள்