நாடு முழுவதும் பாதாள உலக குழுக்கள் தலைத்தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தங்காலை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு, மூன்று வாரங்களில், குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட சம்பவங்களை அறியக்கூடியதாக இருந்தது.
இவற்றால் குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் அச்சத்துடன் வாழ்க்கின்றனர்.
தீவிரவாத்தைவிட தற்போது பாதாள உலகக் குழுக்கள் தலைத்தூக்கியுள்ளன.
இதனால், நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் ஆபத்தானது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.