பல்கலை. மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு

315 0
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் 4 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தற்போது சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரே மாணவர்களுடன் பேச்சு நடத்துகின்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்ட கூடாரத்துக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவெடுக்க தம்முடன் பேச வருமாறு மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் மாணவர்கள் அழைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment