உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்திக்க தீர்மானம்

272 0

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்திக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளும், மக்கள் பிரதி நிதிகளும் தீர்மானித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தொடர் போராட்டம் நடத்திவரும் யாழப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வடமாகாண மக்கள் பிரதி நிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்த மற்றும் மாகாணசபை உறுப்பின்னர்களான கே.சிவாஜிலிங்கம், கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் 3 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 5 நாட்களாக கதவடைப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் அழைப்பின் பேரில் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment