யாழ் பல்கலை கழக பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம்!

Posted by - November 6, 2017

யாழ் பல்கலை கழகத்தின் விடுமுறை வழங்கப்படுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நிர்வாகம் இன்று வழமைபோல் இயங்க ஆரம்பிக்கின்றபோதும் மூடப்பட்ட பீடங்கள் தொடர்பில் நீர்வாகமே கூடி முடிவு செய்யும் என துணை வேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் துணை வேந்தர் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கற்கை நெறிகளைப் புறக்கனித்து நிர்வாக பணி முடக்கத்திலும் மாணவர்கள் ஈடுபட்டவேளையில் ஆராய்ந்த பல்கலைக் கழக  நிர்வாகம்

வாசனை திரவிய விற்பனை நிலையத்தில் கொள்ளை

Posted by - November 6, 2017

களுத்துறை நகரில் வாசனை திரவிய விற்பனை நிலையத்தில் நபரொருவர் நுழைந்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். குறித்த நபர் ரூபாய் 90 ஆயிரம் பணத்தையும், ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெறுமதியான வாசனை திரவியங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாவட்டங்களில் பலத்த மழை

Posted by - November 6, 2017

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீட்டருக்கும் அதிமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதனுடன் புத்தளம் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடுவதுடன்,

கடற்படையினரின் அராஐகத்தால் காரைநகரில் வீட்டுத்திட்டம் பறிபோகும் நிலை

Posted by - November 6, 2017

கடற்படையின் அராஜகத்தால் காரைநகர் மடத்து வளவு மாதிரிகிராமத்துக்கு வரவிருக்கும் வீட்டுத்திட்டம் பறிபோகும் நிலை எற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்கு கடற்படை எடுக்கும் முயற்சிகளை நிறுத்தி இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் கடற்படைக்கு அழுத்தம் கொடுத்து பொதுமக்களின் காணியை மீட்டு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைநகர் மடத்து வளவு பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் போருக்கு முன்னரான காலப்பகுதியில்

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களிற்கும் தாதியர்களிற்கும் அதிக வெற்றிடம்

Posted by - November 6, 2017

வடக்கு மாகாணத்திலேயே ஒரேயொரு  போதனா வைத்தியசாலையாகவுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  வைத்தியர்கள் 49 பேரும் தாதியர்கள் ஆயிரம் பேருக்கும்  வெற்றிடம் நிலவும் நிலமையிலேயே   வைத்தியசாலைப் பணிகள் முன்னெடுப்பதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி    தெரிவித்தார். இது தொடர்பில் பணிப்பாளர்  மேலும் விபரம் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது வைத்தியர்களிற்கும் தாதியர்களிற்கும் அதிக வெற்றிடம் காணப்படுகின்ற நிலையிலேயே பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக 361 வைத்தியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 312 வைத்தியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்த நிலையில்

ஜனாதிபதிக்கு மகயர் தீர்வு இல்லையேல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடுவோம்

Posted by - November 6, 2017

முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்க சமாசத்தால் கடந்த 20.11.2017 அன்று வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பனை தென்னை மரங்களுக்கு அனுமதி பெறவேண்டும் ஆனால் கித்துள்ள மரத்தில் கள் இறக்க அனுமதி பெறதேவையில்லை என்ற வர்த்தமானி அறிவித்தலின் பாதிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகயர் அனுப்பி வைக்கவுள்ளதாகவும்  தீர்வு இல்லையேல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராடவேண்டிய நிலை ஏற்ப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் கடந்த 20.11.2017 அன்று வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பனை தென்னை மரங்களுக்கு அனுமதி பெறவேண்டும் ஆனால்

கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - November 6, 2017

ஹப்புத்தளையில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைச் செய்யப்படவுள்ளார். இதனிடையே, ஹப்புத்தளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 43 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காணரங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டவர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை

கொள்வனவு செய்த ஆடைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருள்

Posted by - November 6, 2017

ஆடையகம் ஒன்றில் கொள்வனவு செய்த ஆடைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருள் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸாரினால் அரசாங்க இரசாயனவியல் ஆய்வாளரின் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு காலி பிரதான மஜிஸ்த்திரேட் அனுமதி வழங்கியுள்ளார். காலியில் கடந்த 28ஆம் திகதி தாய் ஒருவர் தனது 19 வயது மகனோடு நகரத்திலுள்ள ஆடையகம் ஒன்றிற்கு சென்று 4,300 ரூபா பெறுமதியான இரண்டு காற்சட்டைகளையும் இரண்டு டி.ஷேர்ட்களையும் கொள்வனவு செய்துள்ளார். வீட்டிற்கு சென்று கொள்வனவு செய்த

பஸ் விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

Posted by - November 6, 2017

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், 43 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் சிலாபம், புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் , 43 பேர் காயமடைந்த நிலையில்

சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா ஜனாதிபதி தலைமையில்

Posted by - November 6, 2017

இலங்கை சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா 2017 இன்று (06) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது. இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு நன்மை முறையை நடைமுறைப்படுத்தி வழங்கப்பட்டுள்ள இலக்கை அடைந்துள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஓய்வூதிய முறைமையின் நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்லுதல் மற்றும் ஓய்வூதிய முன்மொழிவு முறைமையை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை பாராட்டும் வகையில் இந்த விருது