யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி

Posted by - November 10, 2017

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையினுள் உணவுப் பொதியினுள் கஞ்சாவை கொண்டு செல்ல முயன்ற வன்னிப் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேகநபர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை

Posted by - November 10, 2017

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசாரணை தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சத்தியக் கடதாசிகள் பெற்றுக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பெபரல் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, இது தொடர்பிலான சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம்

Posted by - November 10, 2017

பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றின் கனேடிய பிரதிநிதிகள் குழுவொன்று மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக் வந்துள்ளனர். சமாதான முனைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதிநிதிகள் குழுவில் பல்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர், வர்த்தக அமைச்சர் – இந்தியா பயணம்

Posted by - November 10, 2017

 ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தின்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையத்தை எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளமை மற்றும் எட்கா உடன்படிக்கை குறித்த பேச்சுகளை இறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் முக்கிய பொருளாதார

பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம்

Posted by - November 10, 2017

காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவுக்கு இரட்டை பிரஜாவுரிமை காணப்படுவதால் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து வெற்றிடமாக இடத்துக்கு பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கா…(காணொளி)

Posted by - November 10, 2017

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 12 பேர் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 9 பேரின் மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

Posted by - November 10, 2017

வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம், வைரவப்புளியங்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. நினைவு தின நிகழ்வு, வைரவப்புளியங்குளத்தில் அன்னாரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபியில், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரனியும், அமரர் சிவசிதம்பரத்தின் உருவச்சிலையை நிறுவியவருமான முருகேசு சிற்றம்பலம், வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நகர பிதா

நுழையும் காட்டு யானைகள், வீடுகள் மற்றும் பயிர்களை நாசப்படுத்துவாக, கிராம மக்கள் கவலை(காணொளி)

Posted by - November 10, 2017

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, வனக்குரவர்கள் வாழும் சிறிவள்ளிபுரம் கிராமத்திற்குள்,; நுழைந்த காட்டு யானைகள், வீடுகள் மற்றும் கடை ஒன்றினையும் தாக்கி பயிர்களையும் நாசப்படுத்தியுள்ளதாக, கிராம வாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் போது வாழை மற்றும் மரவள்ளி ஆகியவற்றை காட்டு யானைகள் தேசப்படுத்தியுள்ளன. காட்டு யானைகளின் சத்தம் கேட்டு, கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து காட்டு யானைகள் வீடுகளையும் பயிர்களையும் தேசப்படுத்தியுள்ளன. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கோவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி

கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.!

Posted by - November 10, 2017

நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை. எனவே எவ்வாறு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அரசாங்கம் அதிகார பகிர்வை வழங்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து

வவுனியாவில் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - November 10, 2017

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குழி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில்  வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இ.போ.ச பேருந்தில் 2 கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் நாவற்குழி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை  வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று மாலை