இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கா…(காணொளி)

413 0

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 12 பேர் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் 9 பேரின் மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு 9 மனுக்களும் மாற்றப்பட்டுள்ளன.

அந்த 9 பேர் சார்பாக மீளவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நிராகரித்தது.

இவை தற்போது மற்றொரு மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ளமையாலேயே நிராகரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார்.

ஏனைய 3 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

குறித்த மனுக்களில் யாழ்ப்பாணம் இராணுவக் கட்டளைத் தளபதி, இராணுவத் தளபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a comment