வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குழி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இ.போ.ச பேருந்தில் 2 கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் நாவற்குழி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

