நுழையும் காட்டு யானைகள், வீடுகள் மற்றும் பயிர்களை நாசப்படுத்துவாக, கிராம மக்கள் கவலை(காணொளி)

501 0

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, வனக்குரவர்கள் வாழும் சிறிவள்ளிபுரம் கிராமத்திற்குள்,; நுழைந்த காட்டு யானைகள், வீடுகள் மற்றும் கடை ஒன்றினையும் தாக்கி பயிர்களையும் நாசப்படுத்தியுள்ளதாக, கிராம வாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் போது வாழை மற்றும் மரவள்ளி ஆகியவற்றை காட்டு யானைகள் தேசப்படுத்தியுள்ளன.

காட்டு யானைகளின் சத்தம் கேட்டு, கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து காட்டு யானைகள் வீடுகளையும் பயிர்களையும் தேசப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கோவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி டி.கேதீஸ், அழிவுகள் தொடர்பான விபரங்களை திரட்டியதுடன், தற்பாதுகாப்புக்காக யானை வெடிகளையும் கிராம மக்களிடம் வழங்கியுள்ளார்.

இதன் போது யானை வேலிகளை அமைத்து தருமாறு கிராம மக்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment