ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் பெற்றோல் பாரவூர்தியில் இடம்பெற்று வந்துள்ள மோசடி

Posted by - November 13, 2017

பெற்றோலில் மண்ணெண்ணை கலந்து இடம்பெற்று வந்துள்ள மோசடியை காவல்துறை அதிரப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். கலவெல – தெவஹூவ – மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் பெற்றோல் பாரவூர்தியில் பெற்றோலை கலந்த மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பாரவூர்தியின் சாரதி ,உதவியாளர் மற்றும் மண்ணெண்ணையை ஏற்றிவந்த மேலும் ஒரு பாரவூர்தியின் சாரதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த பெற்றோல் பாரவூர்தி, திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.

பொதுக் கணக்குகள் செயற்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு

Posted by - November 13, 2017

கடந்த 2015 ஆம் ஆண்டு அரச நிறுவனங்களின் நிதி விடயங்கள் தொடர்பில் பொது கணக்கு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதீடு தொடர்பிலான இன்றைய விவாதம் ஆரம்பிக்கப்டுவதற்கு முன்னர் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 32 ஆவது பொது கணக்குகள், 831 நிறுவனங்களின் நிதி செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் மூன்றாவது நாள் விவாத

கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம்

Posted by - November 13, 2017

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று முற்பகல் 10.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் வைத்தியகலாநிதியும் நாடாளமன்ற உறுப்பினருமான சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் . கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், வன்னிமாவட்ட பாராளனம்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாணசபை பிரதிஅவைத்தலைவர் வ.கமேலேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்,வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோருடன் துறைசார் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்ற அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில்

உள்ளுராட்சி தேர்தல் திகதி வெள்ளிக்கிழமை

Posted by - November 13, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை ஒன்று கூடவுள்ளது. தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கான வேட்பு மனு கோரலுக்கான வர்த்தமானி இந்த மாதம் 27ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னுமொரு 30 வருடத்தினை எதிர்பார்க்க வேண்டும்-விஜயகலா

Posted by - November 13, 2017

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. மரணச்சான்றிதழை வழங்கினால், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். தற்போது பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார் கட்சிகளை உடைக்காது, 2020 ற்குள் தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டுமென என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று  (13.11) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது,

சிவனொளிபாதமலை யாத்திரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை

Posted by - November 13, 2017

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது,பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உக்காத தின்மப் பொருட்களை கொண்டுசெல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பூரணை தினத்துடன் சிவனொளி பாதமலையின் யாத்திரைக் காலம் ஆரம்பமாகிறது. இதன்போது, பொலித்தீன் பொருட்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை கட்டாயமாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுவரெலிய மாவட்ட சிரேஷ்ட பொதுசுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக காவற்துறையினரின் துணையுடன், மஸ்கெலியாவில் இருந்து நல்லத்தண்ணி சிவனொளி பாதமலைக்கான பாதை வரையில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.

ஹெரோயின் மாத்திரைகளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - November 13, 2017

ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்திரைகளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 42 ஹெரோயின் போதைப்பொருள் மாத்திரைகளை விமானநிலைய அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஒவ்வொன்றும் 7 முதல் 10 கிராம் வீதம் 42 ஹெரோயின் போதைப்பொருள் மாத்திரைகளை அவரிடமிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது

Posted by - November 13, 2017

கொஸ்கொட – குருந்துகம்பியச, மெனிக்கம்மானய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியால் சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அடையாளம் காணப்பட்ட நிலையில், பொலிஸாரால் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் நேற்றிரவு கட்டுவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது. 22 வயதாக முக்கிய சந்தேக நபர்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசு கூடுதல் கவனம் – ருவன்

Posted by - November 13, 2017

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்றவகையிலேயே முன்மொழிவுகள் வரவுசெலவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக மல்வான பிரதேசத்தில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நன்கு அறிவர். யார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதிலும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமகால அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்

சரணடைந்தவர்களை துன்புறுத்தும் அவசியம் இராணுவதிற்கு இருக்கவில்லை – இராணுவ தளபதி

Posted by - November 13, 2017

இலங்கை இராணுத்திவத்திடம் சரணடைந்தவர்களையும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்களையும் துன்புறுத்தவில்லையென இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் துன்புறுத்த வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு ஒருபோதும் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்