முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
இன்று முற்பகல் 10.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் வைத்தியகலாநிதியும் நாடாளமன்ற உறுப்பினருமான சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் .
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், வன்னிமாவட்ட பாராளனம்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாணசபை பிரதிஅவைத்தலைவர் வ.கமேலேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்,வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோருடன் துறைசார் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்ற அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளின் வீதிஅபிவிருத்திகள்,மக்களின் வீடுகள்,கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகள், மக்கள் வாழ் இடங்கள் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கதைக்கப்பட்டுள்ளது.