சிவனொளிபாதமலை யாத்திரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை

277 0

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது,பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உக்காத தின்மப் பொருட்களை கொண்டுசெல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பூரணை தினத்துடன் சிவனொளி பாதமலையின் யாத்திரைக் காலம் ஆரம்பமாகிறது.

இதன்போது, பொலித்தீன் பொருட்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை கட்டாயமாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்ட சிரேஷ்ட பொதுசுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக காவற்துறையினரின் துணையுடன், மஸ்கெலியாவில் இருந்து நல்லத்தண்ணி சிவனொளி பாதமலைக்கான பாதை வரையில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.

Leave a comment