நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Posted by - November 14, 2017

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று காலை குறித்த இளைஞன் 11 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். அகப்பட்ட குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் நீரில் மூழ்கி

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி 17 ஆம் திகதி அறிவிப்பு

Posted by - November 14, 2017

mahiஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதனால், தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் நடாத்தும் திகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கடற்படையிடம் நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்!

Posted by - November 14, 2017

சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ​பணியை, இலங்கைக் கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்காக,

பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது!

Posted by - November 14, 2017

இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ள ஊழியர்கள், மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கோ அல்லது உத்தியோகபூர்வமன முறையில் சேவையில் இருந்து விலகிச் செல்வதற்கோ விடுக்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வரவு – செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன!

Posted by - November 14, 2017

“இம்முறை வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது, இரண்டு வரவு – செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது. “இவ்விரு ஆவணங்களில் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிறைவேற்றுவதற்காக வேறொரு வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என, முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வ​ரவு – செலவுத் திட்டத்தில், அரச நிறுவனங்கள் விற்கப்படுவது குறித்தோ அல்லது குத்தகைக்கு விடப்படுவது குறித்தோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் உண்மையிலேயே,

உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது!

Posted by - November 14, 2017

ஜேர்மனியில்உ ள்ள சிரிய அகதிகள் அசாத்ஆ ட்சிக்கு எதிரா க போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள அடிப்படைவாதிகளின் திட்டம் குறித்து வௌிப்படுத்தும் தயாசிறி!

Posted by - November 14, 2017

ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள சில அடிப்படைவாதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியை தோற்கடிக்க திட்டமிட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து!

Posted by - November 14, 2017

இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து செய்து கொள்வதாக கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

Posted by - November 14, 2017

மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபராக மா. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும் இருந்து திறன்பட சேவையாற்றியுள்ளார். இதேவேளை கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.