ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள அடிப்படைவாதிகளின் திட்டம் குறித்து வௌிப்படுத்தும் தயாசிறி!

370 0

ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள சில அடிப்படைவாதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியை தோற்கடிக்க திட்டமிட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதன் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் முயற்சிக்கு ஒருபோதும் விரும்பமில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதன்காரணமாக, ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அடிப்படைவாதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியை தோற்கடித்து இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நேற்று (13) குருணாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்களா என செய்தியாளர்கள் வினவியபோதே அவர் பதிலளிக்கையில், சில தரப்பினர் ஒன்றிணைவதற்கும், இன்னும் சில தரப்பினர் விலகுவதற்கும் எத்தனிக்கின்றார்கள்.

காலம் செல்ல செல்ல தேர்தல்கள் இடம்பெறும் தருணங்களில் இந்த விடயங்களை அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Leave a comment