முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் (காணொளி)

Posted by - January 8, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 40 வரையான குளங்கள் புனரமைப்பு

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறகுற்றங்களுக்காக தண்டணை அனுபவித்த வந்தவர்களே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்(காணொளி)

Posted by - January 8, 2017

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று மாலை இலங்கை விஜயம் செய்துள்ள சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புக்கள் போன்றனவற்றில் அடைந்துள்ள அபிவிருத்தி குறித்து ஆந்திர முதல்வருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் ஆந்திர மாநிலத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

யாழ்ப்பாணத்தில் பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.(காணொளி)

Posted by - January 8, 2017

யாழ்ப்பாணத்தில் மனித பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை மாநகரசபையினர் அடையாளப்படுத்தி பறிமுதல் செய்து அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் இறைச்சி விற்பனை நிலையத்தில் மனித பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை குளிரூட்டியில் வைத்து விற்பனை செய்த முயற்சித்த போது பொது சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல் செய்து அழிக்க முற்பட்ட சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற பல்வேறு ஊடகங்களின் ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால்

மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவுபெற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று காலை மட்டக்களப்பில் உள்ள நான்கு வீதிகள் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ்.அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான உட்கட்டுமான வேலைத்திட்டத்தின்

யாழ்ப்பாணத்தில் சுகாதார பரிசோதகர்களால் பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் கைப்பற்றப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017

யாழ்ப்பாணம் பண்ணை மாட்டிறைச்சி கடைத் தொகுதியிலிருந்து பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன. பாவனைக்கு உதவாத நிலையில் குளிரூட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த மாட்டிறைச்சிகளை மாநகர சபையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். மாநகர சபையினரால் கைப்பற்றப்பட்ட இறைச்சிகள் நீண்ட காலமாக குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன. பழுதடைந்த நிலையிலிருந்த இறைச்சிகளை மாநகர சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றி அழிக்க முற்பட்ட போது பண்ணை இறைச்சி விற்பனையாளர்களுக்கும், மாநகரபை சுகாதார பரிசோதகர்களுக்கும் இடையில் குழப்பநிலை

தமிழ் மக்களை இனியும் ஏமாளிகளாக்கமுடியாது – மனோ கணேசன்

Posted by - January 8, 2017

பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் இழுபறிகளுக்கெல்லாம், இனியும் தமிழ் மக்கள் பலிக்கடாவாகமுடியாது. புதிய அரசியலமைப்புக்குத் தயாரில்லையென்றால் அரசியலமைப்புப் பேரவையைக் கலைத்துவிட்டு தீர்வு எதையும் தரத் தயாரில்லையென சர்வதேசத்துக்கும் தமிழ் மக்களுக்கும் வெளிப்படையாகத் அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - January 8, 2017

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் யாழ்ப்பாணம் தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் இன்று பிற்பகல் ஊர்காவற்றுறை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ‘நல்லிணக்க அலைவரிசை’

Posted by - January 8, 2017

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு ஆரம்பம்

Posted by - January 8, 2017

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட”பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு ஆரம்பம்” தேசிய நிகழ்வு இன்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.