இலங்கை கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

293 0

india-meenavarஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் யாழ்ப்பாணம் தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் இன்று பிற்பகல் ஊர்காவற்றுறை பதில் நீதிமன்ற நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஆர்.சுதாகர் அறிவித்துள்ளார்.