யாழ்ப்பாணத்தில் சுகாதார பரிசோதகர்களால் பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் கைப்பற்றப்பட்டன(காணொளி)

290 0

madduயாழ்ப்பாணம் பண்ணை மாட்டிறைச்சி கடைத் தொகுதியிலிருந்து பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.

பாவனைக்கு உதவாத நிலையில் குளிரூட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த மாட்டிறைச்சிகளை மாநகர சபையினர் கைப்பற்றி அழித்துள்ளனர்.

மாநகர சபையினரால் கைப்பற்றப்பட்ட இறைச்சிகள் நீண்ட காலமாக குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன.

பழுதடைந்த நிலையிலிருந்த இறைச்சிகளை மாநகர சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றி அழிக்க முற்பட்ட போது பண்ணை இறைச்சி விற்பனையாளர்களுக்கும், மாநகரபை சுகாதார பரிசோதகர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.

பின்னர் யாழ்ப்பாண பொலிசாரின் உதவியுடன் குறித்த இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.