பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு ஆரம்பம்

275 0

544265789untitled-1ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட”பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு ஆரம்பம்” தேசிய நிகழ்வு இன்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பிலான புதிய வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது இதன்நோக்கம் என தெரியவந்துள்ளது. இதேவேளை இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயிடு கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்நிமித்தம் இலங்கை வந்துள்ள அவர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.