அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

Posted by - November 15, 2017

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில்  5 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தெஹமா கவுன்டி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் துப்பாக்கியைக் கொண்டு ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அவர் பள்ளியின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்தத் தாக்குதலில் அப்பள்ளியிலிருந்த 5 பேர் பலியாகினர். பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கெவின் ஜான்சன்

மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்கான ‘ஹெல்ப்லைன்’ வசதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Posted by - November 15, 2017

பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் `ஹெல்ப்லைன்’ வசதி (இலவச தொடர்பு எண்) கொண்டுவரப்படும் என்று சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். விழாவில்

7 ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்

Posted by - November 15, 2017

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையராக இருந்தஏ.அமல்ராஜ், திருச்சி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையரான ஏ.அருண், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த கே.பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள் ளார். சென்னை சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக இருந்த ஜி.வெங்கடராமன், காவல் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இடமாற்றம்

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 15, 2017

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கே நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் புதன்கிழமை மிதமான மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வைப்

நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்: ஆளுநர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை

Posted by - November 15, 2017

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அருகில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள். ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர்

சட்டங்களை சரியாக அமல்படுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது: பெண் இன்ஜினீயர் கொலை குறித்து கனிமொழி கருத்து

Posted by - November 15, 2017

அதிகரித்து வரும் ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்கவும் பெண்கள் மனதிலும் அவர்களின் குடும்பத்தாரின் மனதிலும் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவும்,  சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “கடந்த மூன்று மாதங்களில் இது நான்காவது சம்பவம். ஒருதலைக் காதல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டில் நடந்த ஸ்வாதி கொலையில் ஆரம்பித்து, இப்போது நடந்துள்ள இந்துஜா கொலை

அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது ஆரோக்கியமான மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது: ஸ்டாலின் கடும் தாக்கு

Posted by - November 15, 2017

அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள நீண்ட அறிக்கையில், “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றைய தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை அழைத்து ஆய்வு நடத்தியிருப்பது, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைப்

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணி ஆரம்பம்!

Posted by - November 15, 2017

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான மூலம் துப்பரவுப் பணி நடை பெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) காலை 09.00 மணிமுதல் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முன் வேலை வேண்டும்!

Posted by - November 15, 2017

தேர்தலுக்கு முன்னராக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரி பட்டதாரிகள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை போராட்டத்தை மேற்கொண்டனர். வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. தற்போது தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தலிற்கு முன் அரச நியமனங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் இல்லையேல் நடைபெறவுள்ள தேர்தல்களை பட்டதாரிகள் புறக்கணிக்கப் போவதாகவும் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

தடம் புரண்டது ரயில்!

Posted by - November 15, 2017

ரயில் ஒன்று தடம்புரண்டதால், புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான புகையிரத பாதையில் குறித்த ரயில தடம் புரண்டுள்ளது. நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் இன்று (புதன்கிழமை) காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த புகையிரத சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு