சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

321 0

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கே நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் புதன்கிழமை மிதமான மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வைப் பொறுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. புதன்கிழமை முதல் மழை படிப்படியாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment