தேர்தலுக்கு முன் வேலை வேண்டும்!

221 0

தேர்தலுக்கு முன்னராக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரி பட்டதாரிகள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை போராட்டத்தை மேற்கொண்டனர்.

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.

தற்போது தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தலிற்கு முன் அரச நியமனங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் இல்லையேல் நடைபெறவுள்ள தேர்தல்களை பட்டதாரிகள் புறக்கணிக்கப் போவதாகவும் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

Leave a comment