தடம் புரண்டது ரயில்!

215 0

ரயில் ஒன்று தடம்புரண்டதால், புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான புகையிரத பாதையில் குறித்த ரயில தடம் புரண்டுள்ளது.

நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இன்று (புதன்கிழமை) காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த புகையிரத சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு – கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதங்களும் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Leave a comment