எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா

Posted by - January 12, 2017

தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி முதல் தனது அரசியல் பயணம் தொடங்கும் என்று தீபா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளும் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் கூடி வருகின்றனர். அப்போது அவர்கள் தீபா,

தமிழக மீனவர்கள் 2 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

Posted by - January 12, 2017

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வருடத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நிச்சயம்! – உறுதிப்படுத்துகிறார் மஹிந்த

Posted by - January 12, 2017

ஆட்சிக் கவிழ்ப்புக்கு காலம் கடத்தப்படாது. இந்த வருடத்திலேயே அதனை பார்க்க முடியும். எப்போது என்று கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற நல்லிணக்க பொறிமுறை கண்டிக்கதக்கது

Posted by - January 12, 2017

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையின் ஊடாக படையினருக்கு பாரிய அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை பீரிஸே குழப்பினார்! – ராஜித சேனாரத்ன

Posted by - January 12, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில், அப்போதைய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது தேவைக்காக சில யோசனைகளை முன்வைத்ததால் எல்லாம் குழப்பியடிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு உதாசீனம்! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஏமாற்றம்

Posted by - January 12, 2017

நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வரும் வரை, அந்நாட்டில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைப்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரம்ரன் மாநகரசபையில் முதலமைச்சர் விக்கி உரை! – 45000 டொலர் நிதி கையளிப்பு

Posted by - January 12, 2017

கனடா- பிரம்ரன் மாநகரசபைக்கும் வவுனியாவுக்குமான உறவுப் பாலத்தின் முதலாவது சந்திப்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்று உரையாற்றினார். பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்ய கோருகிறார் சட்டமா அதிபர்!

Posted by - January 11, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து விட்டு, வழக்கு விசாரணைகளை மீண்டும் நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

விமல் வீரவன்சவிற்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு சென்று கொடுக்க அனுமதி

Posted by - January 11, 2017

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு சென்று கொடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.