பிரம்ரன் மாநகரசபையில் முதலமைச்சர் விக்கி உரை! – 45000 டொலர் நிதி கையளிப்பு

224 0

bramton-cm-120117-seithy (5)கனடா- பிரம்ரன் மாநகரசபைக்கும் வவுனியாவுக்குமான உறவுப் பாலத்தின் முதலாவது சந்திப்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்று உரையாற்றினார். பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு, அங்கு கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களோடும் வடமாகாணத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறியிருந்தார். இதன்போது வடக்கில் முள்ளந்தண்டு பாதிப்புற்றவர்களுக்காக பிரம்ரன் மாநகர மக்களால் 45000 டொலர் நிதியுதவி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.