ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

Posted by - January 17, 2017

போலீசாரின் கட்டுக்காவலையும் மீறி அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வாடிவாசலில் திரண்ட முகநூல் நண்பர்கள் நள்ளிரவு வரை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

20-ந்திகதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - January 17, 2017

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் வருகிற 20-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரசு பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி

Posted by - January 17, 2017

நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டவர்களுக்கு வாழ்த்துகள்

Posted by - January 17, 2017

அன்பும், பாசமும் காட்டி தன்னிடம் ஊக்கம் ஊட்டியவர் என்றும், எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தெற்கு வலய, விவசாய உதவிப்பணிப்பாளர் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது (காணொளி)

Posted by - January 16, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி, பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த காலத்தில் விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த கட்டிடத்தில் விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைக்கப்பட்டிருந்ததுடன், யுத்ததினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் கிழக்கு மாகாண விவசாய திணைக்களம், விவசாயிகளின் நன்மை கருதி 50 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடத்தினை அமைத்துள்ளது. கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி

பரந்தன் ஏ-35 வீதியின் பிரதான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் மிக மோசமாக சேதமடைந்;து காணப்படுகின்றது(காணொளி)

Posted by - January 16, 2017

முல்லைத்தீவு  பரந்தன் ஏ-35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தினை புனரமைப்பதற்கு சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்;துள்ளது. முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பிரதான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன் பாலத்தின் பாதுகாப்பு தூண்கள் இல்லாததனால் ஏற்படும் விபத்துக்களால் பலர் காயமடைந்தும் உயிரிழக்கவும் நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த பாலத்தினை புனரமைத்துத்தருமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்;துள்ளனர்.

வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017

மட்டக்களப்பு, வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் குறித்த ஆர்பாட்டம் நடைபெற்றது. நேற்றுக் காலை வாகரை வட்டவானில் உள்ள குறித்த வெளிநாட்டவரின் விடுதிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் பிரதான வீதியை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸடைய சேவைகள் ஒரு இயக்கத்திற்கு மக்கள் பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும்- ரவூப் ஹக்கீம் (காணொளி)

Posted by - January 16, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்டைய சேவைகள் ஒரு இயக்கத்திற்கு மக்கள் பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று மாலை புத்தளத்திற்கு விஜயம் செய்தார். புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தார்.

இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது- என்.சுதாகரன் (காணொளி)

Posted by - January 16, 2017

  கிளிநொச்சி இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்;துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார் 59 ஆயிரம் ஏக்கர் வரையான காலபோக நெற்செய்கையில் பதினையாயிரம் தொடக்கம் இருபதாயிரம் ஏக்கர் வரையான செய்கைகளைப் பாதுகாக்க முடியும் என்றும் பருவமழை பொய்ந்து விட்டதால் ஏனைய செய்கைகளை கைவிடும் அபாயநிலை காணப்படுவதாக

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கு புதிதாக மரக்கறிக்கடைத்தொகுதி (காணொளி)

Posted by - January 16, 2017

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையின் மரக்கறிக்கடைத்தொகுதி புதிதாக நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள முதன்மையான பொதுச்சந்தையாகக் காணப்படும் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை போதிய வசதிகள் இன்றிக் காணப்படுகின்றன. இதனையடுத்து கடந்த ஆண்டு பொதுச்சந்தையின் கடலுணவு விற்பனைத் தொகுதிக்கான புதிய கட்டடத்தொகுதி நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டநிலையில் மரக்கறி வாணிப தொகுதி மற்றும் ஏனைய கடைத்தொகுதிகள் தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்து ஆண்டு நெல்சீப் திட்டத்தின் கீழ் 32 கடைகளைக்கொண்ட புதிய