பரந்தன் ஏ-35 வீதியின் பிரதான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் மிக மோசமாக சேதமடைந்;து காணப்படுகின்றது(காணொளி)

357 0

paranthanமுல்லைத்தீவு  பரந்தன் ஏ-35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தினை புனரமைப்பதற்கு சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்;துள்ளது.

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பிரதான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன் பாலத்தின் பாதுகாப்பு தூண்கள் இல்லாததனால் ஏற்படும் விபத்துக்களால் பலர் காயமடைந்தும் உயிரிழக்கவும் நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பாலத்தினை புனரமைத்துத்தருமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்;துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது, வட்டுவாகல் பாலத்திற்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாலத்தினை புனரமைப்பதற்கு சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.