இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது- என்.சுதாகரன் (காணொளி)

341 0

 

eranaimaduகிளிநொச்சி இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்;துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார் 59 ஆயிரம் ஏக்கர் வரையான காலபோக நெற்செய்கையில் பதினையாயிரம் தொடக்கம் இருபதாயிரம் ஏக்கர் வரையான செய்கைகளைப் பாதுகாக்க முடியும் என்றும் பருவமழை பொய்ந்து விட்டதால் ஏனைய செய்கைகளை கைவிடும் அபாயநிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.